தமிழ் ஷேக்ஸ்பியர்
தமிழ் ஷேக்ஸ்பியர் சுந்தரம் பிள்ளை கேரளத்தில் பிறந்தவர். அன்றைய திருவிதாங்கூரின் முக்கிய துறைமுகப் பட்டினமான ஆலப்புழையில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மாள். தந்தையார் துணி வியாபாரம் செய்துவந்தார். ஆலப்புழையில் தமிழ்ப் பள்ளியில் படித்த சுந்தரம் பிள்ளைக்கு திருவிதாங்கூர் சமஸ்தான அரசு மாதம் எட்டு ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுத்து ஊக்குவித்தது. இந்த உதவித்தொகை இவருக்கு இளங்கலை பட்டம் பெறும் காலம் வரைக்கும் கொடுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் முதல் மாணவராகவும் அன்றைய சென்னை மாகாணத்தில் நான்காவது மாணவராகவும் இளங்கலையில் தேறினார். சுந்தரம் பிள்ளை தாய்மொழியான தமிழுடன் ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். தத்துவம், சமயம், வரலாறு இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அன்றைய திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ரோஸ் அவர்கள் அக்கல்லூரியிலேயே வரலாறு, தத்துவ இயல் கற்பிக்கும் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். தத்...