இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது நூல்களும் சமர்ப்பணமும்

படம்
  தி இந்து தமிழ்த்திசை இதழில் பழ. அதியமான் "சமர்ப்பணமும் நன்றியும்" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சமர்ப்பணம் என்பது மேற்கின் கொடை என்றும் ஆங்கிலேயர்கள் யாருக்கும் நூலைச் சமர்ப்பணம் செய்தால் அவர்களிடம் அனுமதியும் இசைவும் பெற்றே பதிவுசெய்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சமர்ப்பணம் என்பதற்கு காணிக்கை, படையல், நேர்ந்தளித்தல்,  அர்ப்பணம்,  உரிமையுரை ஆகிய சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். இதை வாசித்த பொழுது நான் எனது நூல்களை யாருக்கெல்லாம் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் என்று அசைபோட்டு பார்க்கத் தோன்றியது சிறுகதைத் தொகுப்புகள் 1. மழைக்குப் பிறகான பொழுது தாய்வழி தாத்தா தெய்வத்திரு.  சடையப்பன் அவர்களுக்கு 2. திற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுக்கு 3. ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை வாச்சாத்தி என்கிற பெயர்ச்சொல்லை வினைச் சொல்லாக மாற்றியவர்களுக்கு 3. பிராண நிறக் கனவு நடுநிசி அவள் கூடாத கனவைக் கண்டவளாய் திடுக்கென விழித்துக் குடிசைக்கு வெளியே ஓடிவந்தாள். அவளுக்குத் திசை தெரியவில்லை. இடம், வலம், மேல், கீழ் புரியவில்லை. எந்த இடத்தில் ...

கரீடாரமன் மீது பூப்பந்தை வீசிய ரசிகா(காதலர் தினக் கட்டுரை)

படம்
பாரதி பயன்படுத்திய உவமைகளில் பெரியது காதலை எழுத அவர் பயன்படுத்திய உவமை. காதல் கவிதைகளை மூன்று வகைப்படுத்தலாம். அரும்பு கால கவிதைகள், பருவக் கால கவிதைகள், பிரிவு காலக் கவிதைகள். பிரிவு காதல் கவிதைக்கு மென்உணர்வுகள் அதிகம். உணர்வு மென்மையாக இருக்கையில் கற்பனை எனும் செடி நன்றாகச் செழித்து பூக்கும். 1910 முதல் 1913 ஆம் ஆண்டு வரையிலான காலம் பாரதியார் தன் படைப்புகளில் உச்சம் தொட்ட காலம் எனலாம். பாரதியின் சுயசரிதம் என்று சொல்லக்கூடிய ஞானரதம் இந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டது.   பாரதி ஏழ்மையில் வாழ்ந்த காலமது. இந்தக் காலத்தின் பாரதியின் சிறு துளி வாழ்க்கைதான் ஞானரதம். இந்நூலின்   முகவுரையில் இவ்வாறு எழுதுகிறார் பாரதி:   "இந்நூலை   நானாக எழுதவில்லை. எல்லா நடத்தும் பரமாத்மா ஞான தீரமில்லாத ஏழையேனைக் கொண்டு ஞான ரதத்தில்   ஏற்றினான்."   மேலும் இப்படைப்பில் பாரதிக்கு இயலாமை காலத்தில் உதவிய அவரது நண்பர் மஹேசகுமார சர்மாவுக்கு நன்றியையும் அன்பையும் தெரிவிக்கிறார்.        ஞான ரதம் கதை இதுதான்: பின் மாலைப்பொழுதில் திருவல்லிக்கேணி வீரராகவ ...