முட்டாளும் முற்றாளும்
கட்டுரை ( ஏப்ரல் 1 தினக் கட்டுரை ) அறிவியலின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று நைட்ரஸ் ஆக்ஸைடு. சிரிப்பூட்டும் வாயு அது. அப்படியென்றால் கோபமூட்டுவதற்கென்று ஒரு வாயு இருக்க வேண்டுமே? வேண்டியதில்லை, அதற்குத்தான் வாய் இருக்கிறதே! சிலர் பேசத் தெரியாமல் பேசி கோபத்தை மூட்டுவர். கோபமே வராத நபரிடம், உனக்கு அறிவு இருக்கிறதா என்றோ அல்லது நீயொரு முட்டாள் என்று சொன்னால் போதும்? சொன்னவர் பாடு அவ்வளவேதான்! முட்டாள் என்கிற சொல் இன்று மன்னர், அரசியல், குடியரசு என்கிற சொல்லிற்கு அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக இருக்கிறது. அதற்காக ஒரு தினம் கொண்டாடுமளவிற்கு அந்த சொல் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. . முட்டாள் ஒரு தமிழ்ச்சொல் . சிலையை அல்லது இராணியைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள் , பல்லக்கைக் கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக இருபுறமும் ஒரு மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள் . அவர்களுக்கு அந்த ஒரு வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது . இவர்கள் முட்டு + ஆள் – முட்டாள். “அட...